ADDED : நவ 02, 2024 07:04 AM

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளதால் வெங்காய சாகுபடி தீவிரமாக உள்ளது.
மாவட்டத்தில் ஆண்டுதோறும் 2 ஆயிரம் எக்டேர் வரை வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது. காரியாபட்டி, திருச்சுழி பகுதிகளில் அதிகளவில் நடவு செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் வைகாசி, ஐப்பசி, கார்த்திகை பட்டங்களில் நடவு செய்து வருகின்றனர். தற்போதும் நடவு தீவிரம் அடைந்து வருகிறது. வழக்கமாக வெங்காயத்தை தாக்கும் திருகல் நோயை கட்டுப்படுத்த மேட்டுப்பாத்தி அமைத்தல், சொட்டுநீர் பாசனம் அமைத்தல் என விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது அவ்வாறு வெங்காய நாற்று நட்டவர்களும், விதை நடவு செய்தவர்களுக்கும் செடி வளர துவங்கி உள்ளது. ஐப்பசி பட்டத்தில் விளைந்த வெங்காயத்தை தரம் பிரித்து மார்க்கெட்டில் வாங்குவதால் ரூ.60 முதல் 90 வரை விற்பனையாகிறது.

