sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

நல்லது செய்பவர்களுக்கு மட்டுமே எங்கள் ஆதரவு ஊரக வளர்ச்சித்துறை கூட்டமைப்பு அறிவிப்பு

/

நல்லது செய்பவர்களுக்கு மட்டுமே எங்கள் ஆதரவு ஊரக வளர்ச்சித்துறை கூட்டமைப்பு அறிவிப்பு

நல்லது செய்பவர்களுக்கு மட்டுமே எங்கள் ஆதரவு ஊரக வளர்ச்சித்துறை கூட்டமைப்பு அறிவிப்பு

நல்லது செய்பவர்களுக்கு மட்டுமே எங்கள் ஆதரவு ஊரக வளர்ச்சித்துறை கூட்டமைப்பு அறிவிப்பு


ADDED : அக் 26, 2025 02:16 AM

Google News

ADDED : அக் 26, 2025 02:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: ''எங்களுக்கு நல்லது செய்பவர்களுக்கு மட்டுமே நாங்கள் ஆதரவு கொடுப்போம்'' என விருதுநகரில் ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜான் போஸ்கோ பிரகாஷ் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது: கிராம ஊராட்சியில் பணிபுரியும் துாய்மை காவலர்களுக்கு ரூ.10 ஆயிரம் ஊதியம் வழங்குதல் உட்பட 16 அம்ச கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

தி.மு.க., அரசுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே உள்ளது. நிதி போதவில்லை, அரசிடம் நிதி இல்லை என தெரிவிக்காமல் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றி அரசாணைகளை வெளியிட வேண்டும். இதை வலியுறுத்தி அக்.29ல் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம், மறியல் போராட்டம் நடத்தப்படும். அடுத்தகட்டமாக நவ.24ல் தொடர் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடத்தப்படும். எங்களுக்கு எந்த அரசு நல்லது செய்கிறதோ, அதுவே சாதகமான அரசு. இந்த அரசு நல்லது செய்தால், அந்த நன்மைக்கு ஏதுவானவை நடக்கும். எங்களுக்கு கெடுதல் செய்தால் எங்களுக்கு நல்லது செய்பவர்களுக்கு மட்டுமே நாங்கள் ஆதரவு கொடுப்போம்.மேலும் 1483 ஊராட்சி செயலர் பணியிடங்கள் தேர்வு முறையில் நிரப்ப நடவடிக்கை எடுத்தும், ஒரு சில புரோக்கர்கள் பெற்று தருவதாக மோசடியில் ஈடுபடுகின்றனர். இனி வரும் காலங்களில் அரசு பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us