sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

தொடரும் குழாய் உடைப்பு; தண்ணீரோடு ரோடும் வீண்

/

தொடரும் குழாய் உடைப்பு; தண்ணீரோடு ரோடும் வீண்

தொடரும் குழாய் உடைப்பு; தண்ணீரோடு ரோடும் வீண்

தொடரும் குழாய் உடைப்பு; தண்ணீரோடு ரோடும் வீண்


ADDED : பிப் 05, 2025 11:58 PM

Google News

ADDED : பிப் 05, 2025 11:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம்; ராஜபாளையத்தில் தொடர்ந்து உடைபடும் தாமிரபரணி குடிநீர் குழாயுடன் ரோடும் உடைப்பெடுத்து சேதமடைவதால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

ராஜபாளையத்தில் தாமிரபரணி குடிநீர் திட்டம் 2018ல் தொடங்கி இதற்காக குழாய்கள் பதிக்கப்பட்டு ஒவ்வொரு வீட்டிற்கும் சப்ளை முடிந்து குடிநீர் விநியோக அழுத்தம் குறித்து பல்வேறு கட்டமாக சோதனை செய்யப்பட்டு கடைசி கட்டத்தை எட்டி உள்ளது.

இருப்பினும் பணிகள் முடிந்த பாடு இல்லை. தாமிரபரணி குடிநீர் திட்ட அமைப்பினர் பணிகளை முடித்து நகராட்சியிடம் ஒப்படைத்து விட்டதாகவும், நகராட்சி குழு கூட்டத்தில் ஒப்படைக்கவில்லை என கவுன்சிலர்களின் கேள்விக்கு பதிலும் கிடைத்து வருகிறது.

இந்நிலையில் பிரதான குழாய்கள் வரும் புது பஸ் ஸ்டாண்டிலிருந்து சங்கரன்கோவில் முக்கு வரை உள்ள குழாய்கள் அடிக்கடி உடைப்பெடுத்து 10க்கும் மேற்பட்ட இடங்களில் உடைப்பினால் தண்ணீர் வழிந்தும் இதன் மூலம் ரோடு பாழாகியும் வாகன ஓட்டிகள், மக்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி வருவது தொடர்கதையாக உள்ளது.

இப்பிரச்சனையால் ரோட்டின் ஒரு பகுதி பள்ளங்களுடன் ஒதுங்க முடியாமல் விபத்து ஏற்படுவதுடன், கை, கால் முறிவு உள்ளிட்ட உயிர் பலி சேதம் தொடர்கிறது.

நெடுஞ்சாலை துறை வசம் உள்ள ரோட்டில் ஏற்படும் இந்த பாதிப்புகள் குறித்து முழுமையாக ஆய்வு மேற்கொண்டு பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us