sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ராஜபாளையம் கால்வாய்களில் பிளாஸ்டிக் கழிவுகள் அடைப்பு' -சிக்கலில் துாய்மை பணியாளர்கள்

/

ராஜபாளையம் கால்வாய்களில் பிளாஸ்டிக் கழிவுகள் அடைப்பு' -சிக்கலில் துாய்மை பணியாளர்கள்

ராஜபாளையம் கால்வாய்களில் பிளாஸ்டிக் கழிவுகள் அடைப்பு' -சிக்கலில் துாய்மை பணியாளர்கள்

ராஜபாளையம் கால்வாய்களில் பிளாஸ்டிக் கழிவுகள் அடைப்பு' -சிக்கலில் துாய்மை பணியாளர்கள்


ADDED : நவ 09, 2025 07:15 AM

Google News

ADDED : நவ 09, 2025 07:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம்: ராஜபாளையம் நகராட்சியில் மழைக்காலங்களில் சாக்கடை கால்வாயில் தொடர்ந்து அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் தேங்கும் பிரச்சனைக்கு பிளாஸ்டிக் முக்கிய காரணமாக இருப்பதால் துாய்மை பணியாளர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

ராஜபாளையத்தில் பாதாள சாக்கடை செயல்பாட்டிற்கு வந்த பின்பும் கால்வாய்களில் மழைக்காலங்களின் போது பிளாஸ்டிக் கழிவுகளால் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் ரோட்டில் சென்று பாதிப்பு ஏற்படுத்துகிறது.

குறிப்பாக சங்கரன்கோவில் முக்கில் இருந்து புது பஸ் ஸ்டாண்ட் செல்லும் ஓடையில் மக்களால் துாக்கி வீசப்பட்ட குளிர்பானம், தண்ணீர் பாட்டில், பிளாஸ்டிக் பைகள், தெர்மாகோல் ஓடை பாலத் துாண்களில் தடுக்கப்பட்டு மொத்தமாக தேங்கி நின்றன.

இவற்றை அகற்ற துாய்மை பணியாளர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

கடந்த முறை பெய்த கன மழையால் அகலமான கால்வாயையும் மீறி கழிவு நீர் ரோட்டில் ஓடியதுடன் அருகாமையில் இருந்த வாகன காப்பகம் உள்ளிட்டவைகளுக்குள் புகுந்து பலத்த சேதம் ஏற்படுத்தின.

நகராட்சி பகுதிகளில் ஒருமுறை உபயோகித்து வீசி எரியும் பிளாஸ்டிக் தடை உள்ள நிலையில் கண்காணிப்பை அதிகரிப்பதுடன் கழிவுகளை முறையாக துாய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இதுகுறித்து தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us