/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது 'போக்சோ'
/
சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது 'போக்சோ'
ADDED : ஏப் 28, 2025 12:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார் : விருதுநகர் மாவட்டம் சாத்துார் நடுச்சூரங்குடியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி , 23.இவர் உறவினரின் மகளான 16 வயது சிறுமியை 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். 2024 ஆக. 3 ல் அச்சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்தினார். சிறுமி கர்ப்பமானார். விருதுநகர்அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து மகளிர் நல அலுவலர் மாரியம்மாள் விசாரித்தார். சாத்துார் மகளிர் போலீசார் முத்துப்பாண்டி மீது போக்சோ வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

