நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிசாத்துார்: சாத்துார் அருகே கிராமத்தை சேர்ந்தவர் சதிஷ்.22. இவர் 5ம் வகுப்பு படித்து வரும் பத்து வயது சிறுவனுக்கு ரூபாய், தின்பண்டம் கொடுத்து தனியாக காட்டுப் பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை செய்துள்ளார்.
மேலும் சிறுவனிடம் வெளியே சொன்னால் கத்தியால் குத்தி கொன்று விடுவதாக மிரட்டிள்ளார். பாதிக்கப்பட்ட சிறுவன் அழுது கொண்டு தன் தந்தையிடம் கூற அவர் போலீசில் புகார் செய்தார். மகளிர் போலீசார் சதீஷ் மீது போக்சோ வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

