நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தற்கொலை
சாத்துார்: சாத்துார் ஆண்டாள்புரத்தை சேர்ந்தவர் முத்துக் குமார், 39.மது பழக்கத்திற்கு அடிமையானதால் மனைவி கற்பகலட்சுமி, 32. கண்டித்தார்.மனவிரக்தி அடைந்த முத்துக் குமார் நேற்று முன்தினம் மதியம் 2:00 மணிக்கு வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
மின்சாரம் தாக்கி பலி
சாத்துார்: சாத்துார் சின்னக்கொல்லப்பட்டி தெற்கு ஊரை சேர்ந்தவர் நாதன், 43. நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு போர்வெல் மோட்டார் சுவிட்ச் ஆன் செய்த போது மின்சாரம் பாய்ந்து மயங்கினார். அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது வழியில் பலியானார். இருக்கன்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.