sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

போலீஸ் செய்திகள்/ விருதுநகர்

/

போலீஸ் செய்திகள்/ விருதுநகர்

போலீஸ் செய்திகள்/ விருதுநகர்

போலீஸ் செய்திகள்/ விருதுநகர்


ADDED : அக் 27, 2025 04:08 AM

Google News

ADDED : அக் 27, 2025 04:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்மாயில் வாலிபர் சடலம்

அருப்புக்கோட்டை:: அருப்புக்கோட்டை அருகே ஆத்திப்பட்டியை சேர்ந்தவர் அரவிந்த்சாமி 23, இவர் கறிக்கடையில் இறைச்சி வெட்டும் தொழில் செய்து வந்தார். இவர் அக். 24 மாலையில் இருந்து வீட்டிற்கு வரவில்லை என அவருடைய தந்தை அழகுபாண்டி அருப்புக்கோட்டை தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார்.

இந்நிலையில் நேற்று அதிகாலையில் ஆத்திபட்டியில் உள்ள கண்மாயில் அரவிந்த்சாமி சடலமாக மிதந்து கிடந்தார். தவறி விழுந்து இறந்துள்ளாரா, வேறு ஏதாவது காரணம் உள்ளதா என போலீசார் விசாரிக்கின்றனர்.

....................

மகனின் திருமண வரவேற்புக்குமண்டபம் பார்க்க சென்றவர் பலி

விருதுநகர்:

விருதுநகர் அருகே சூலக்கரை திருமலை நாயக்கர் நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் தனியார் சிமென்ட் ஆலையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றார். இவருடைய மகனின் திருமணம் அக். 24ல் சென்னையில் நடந்தது. பட்டம்புதுார் மண்டபத்தில் திருமண வரவேற்பு இன்று (அக். 27) நடத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது.

நேற்று முன்தினம் மண்டபத்தை பார்ப்பதற்காக டூவீலரில் ஆறுமுகம் சென்றார். அங்கிருந்து வீடு திரும்பும் போது நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோட்டில் நின்று கொண்டிருந்த லாரியில் மோதி ஆறுமுகம் பலியானார். சூலக்கரை போலீசார் லாரி டிரைவர் சங்கரமூர்த்தி மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us