sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 போலீஸ் செய்திகள்

/

 போலீஸ் செய்திகள்

 போலீஸ் செய்திகள்

 போலீஸ் செய்திகள்


ADDED : நவ 21, 2025 04:52 AM

Google News

ADDED : நவ 21, 2025 04:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாலிபர் பலி

சிவகாசி: சிவகாசி நாரணாபுரம் சிவன் நகரை சேர்ந்த தவசியப்பன் 37. மது அருந்தும் பழக்கம் உள்ள இவரை மதுரையில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்திருந்தனர். ஒன்றரை மாதத்திற்கு முன்பு வீட்டிற்கு அழைத்து வந்த நிலையில் மீண்டும் அதிக அளவில் மது அருந்தி வந்துள்ளார். இந்நிலையில் இவர் வீட்டில் காயத்துடன் மது அருந்திய நிலையில் இறந்து கிடந்தார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

---- கஞ்சா விற்றவர் கைது

சிவகாசி: சிவகாசி நடுவப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் கணேஷ் பாண்டி 29. இவர் நாகலாபுரம் அரசு பள்ளி அருகே பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்தார். திருத்தங்கல் போலீசார் அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

பெண் பலி

திருத்தங்கல்: திருத்தங்கல் முத்துமாரி நகரை சேர்ந்தவர் பிரகாஷ் மனைவி சாந்தி 35. இரண்டு ஆண்டுகளாக கை, கால் இடுப்பு வலியால் அவதிப்பட்டு வந்தவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் சரியாகவில்லை. இந்நிலையில் இவர் வீட்டில் இறந்து கிடந்தார். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us