நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பட்டாசு பறிமுதல் சிவகாசி: சிவகாசி ஆலமரத்துப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் அய்யனார் 28. இவர் அரசு அனுமதியின்றி பேன்சி ரக வெடிகுழாய்கள், மிசின் திரிகள் விற்பனைக்காக வைத்திருந்தார். கிழக்கு போலீசார் அவரை கைது பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.
மூதாட்டி பலி சிவகாசி: சிவகாசி வெள்ளையாபுரம் முத்துராமலிங்க தேவர் காலனியை சேர்ந்தவர் சண்முகத்தாய் 90. இவர் ஒரு வாரத்திற்கு முன்பு கோயிலில் சுவாமி கும்பிட்டு வெளியே வரும்போது எரிந்து கொண்டிருந்த விளக்கில் இவரது சேலை பட்டு தீப்பற்றி காயமடைந்தார். சிவகாசி அரசு மருத்துவமனையில் நேற்று பலி யானார். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.

