sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கோயில்களில் பொங்கல் வழிபாடு

/

கோயில்களில் பொங்கல் வழிபாடு

கோயில்களில் பொங்கல் வழிபாடு

கோயில்களில் பொங்கல் வழிபாடு


ADDED : ஜன 15, 2024 11:00 PM

Google News

ADDED : ஜன 15, 2024 11:00 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : விருதுநகர் மாவட்ட கோயில்களில் நேற்று தை முதல் நாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடந்தன.

வாலசுப்பிரமணியசுவாமி கோயிலில் சுவாமிக்கு பூஜை, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மீனாட்சி சொக்கநாதர், பராசக்தி மாரியம்மன், வெயிலுகந்தம்மன் கோயில்கள், ராமர் கோயிலில் பூஜை, அலங்காரம் நடந்தன.

மக்கள் வீடுகளில் பொங்கலிட்டனர். கிராமப்புறங்களில் கிராமிய கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடந்தன. இதே போல் பலர் குலதெய்வ கோயில்களிலும் குடும்பத்துடன் சென்று பொங்கலிட்டு வழிபட்டனர்.

* அருப்புக்கோட்டை ஆயிரங்கண் மாரியம்மன் கோயிலில் தைப்பொங்கலை முன்னிட்டு அம்மன் யானைக்கு கரும்பு கொடுக்கும் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அம்மனுக்கு அபிஷேகம் ஆராதனைகள் நடந்தது.

பழனியாண்டவர் கோவிலில் ஆயிரத்து 8 லட்டு அலங்காரத்தில் பழனி ஆண்டவர் அருள் பாலித்தார். வாலசுப்பிரமணிய கோயில் , பத்ர காளியம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. ராஜபாளையம் சுற்றுவட்டார கோயில்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் வழிபாடு நடந்தது.






      Dinamalar
      Follow us