sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 04, 2026 ,மாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

குண்டும் குழியான ரோடு, கலங்கலாக வரும் குடிநீர்

/

குண்டும் குழியான ரோடு, கலங்கலாக வரும் குடிநீர்

குண்டும் குழியான ரோடு, கலங்கலாக வரும் குடிநீர்

குண்டும் குழியான ரோடு, கலங்கலாக வரும் குடிநீர்


ADDED : பிப் 03, 2024 05:06 AM

Google News

ADDED : பிப் 03, 2024 05:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார் : சாத்துார் அண்ணா நகரில் ஓடையிலிருந்து படை எடுக்கும் விஷ ஜந்துக்களாலும் கலங்கலாக வரும் குடிநீராலும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

சாத்துார் அண்ணா நகரில் பாதாள சாக்கடை விரிவாக்க திட்டத்திற்காகவும் புதிய குடிநீர் திட்டத்திற்காகவும் ரோடுகள் தோண்டப்பட்டதால் பாதை முழுவதும் சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது.

தெரு விளக்குகள் அடிக்கடி பழுதாகிவிடும் நிலையில் இரவு நேரம் நகர் முழுவதும் இருளில் மூழ்கி காணப்படுகிறது. வீடுகளின் வெளிச்சத்திலேயே பொதுமக்கள் நடமாடும் நிலை உள்ளது.

பள்ளம்மேடு தெரியாமல் நடந்து செல்லும் முதியவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். நகரில் போதுமான சுகாதார வளாகம் இல்லாத நிலையில் பொதுமக்கள் திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்தி வருகின்றனர்.

அண்ணா நகர் ஓடையில் முள்செடி அதிகளவில் வளர்ந்துள்ளது. இதில் இருந்து விஷ பூச்சிகள் குடியிருப்பு பகுதிக்குள் படையெடுத்து அச்சுறுத்தி வருகின்றன.

குறுக்கு தெருக்களில் வாறுகால்களை தள்ள ஆட்கள் வருவதில்லை. குப்பை தொட்டிகள் இல்லாததால் ஓடைகளிலும் சாக்கடையிலும் பொதுமக்கள் குப்பையை கொட்டுகின்றனர். இதனால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. தேவையான இடங்களில் குப்பை தொட்டிகள் அமைக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us