/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மண் வீடாக இருந்து காலி இடமான பகுதிக்கு சொத்து வரி ரூ.56லிருந்து ரூ.1107 ஆக உயர்வு விருதுநகர் நகராட்சியில் தான் இந்த கொடுமை
/
மண் வீடாக இருந்து காலி இடமான பகுதிக்கு சொத்து வரி ரூ.56லிருந்து ரூ.1107 ஆக உயர்வு விருதுநகர் நகராட்சியில் தான் இந்த கொடுமை
மண் வீடாக இருந்து காலி இடமான பகுதிக்கு சொத்து வரி ரூ.56லிருந்து ரூ.1107 ஆக உயர்வு விருதுநகர் நகராட்சியில் தான் இந்த கொடுமை
மண் வீடாக இருந்து காலி இடமான பகுதிக்கு சொத்து வரி ரூ.56லிருந்து ரூ.1107 ஆக உயர்வு விருதுநகர் நகராட்சியில் தான் இந்த கொடுமை
ADDED : ஆக 07, 2025 11:19 PM

விருதுநகர்: விருதுநகர் சங்கரநாராயணபுரம் தெருவில் மண் வீடாக இருந்து தற்போது காலி இடமான பகுதிக்கு சொத்து வரியை ரூ.56ல் இருந்து ரூ.1107 ஆக நகராட்சி நிர்வாகம் உயர்த்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் 2022--23ல் சொத்து வரி உயர்த்தப்பட்டது. இதில் 600 சதுர அடி வரையுள்ள வீடுகளுக்கு 25 சதவீதமும், 601-முதல் 1200 வரை 50சதவீதமும், 1201 முதல் 1800 வரை 75 சதவீதமும், 1801 ச.அடிக்கு மேல் உள்ள வீடுகளுக்கு 100 சதவீதமும் வரி உயர்வு செய்யப்பட்டது. வழங்கப்பட்ட ஆட்சேபனை மனுக்களை பெயரளவுக்கே பரிசீலனை செய்த நகராட்சி கமிஷனர்கள் அதனை தள்ளுபடி செய்தனர். அதன் பிறகு வரி உயர்வு அமலுக்கு வந்தது. உயர்த்தப்பட்ட சொத்து வரிகளை மக்கள் வேறு வழியின்றி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் 2024ஜூலை மாதம் ரூ.100க்கு குறைவாக சொத்துவரித் தொகை உள்ள இனங்களை களஆய்வு செய்து உயர்த்த உத்தரவிடப்பட்டது.
விருதுநகர் நகராட்சியில் பல்வேறு வீடுகளை நேரில் ஆய்வு செய்யாமலே, அதன் உரிமையாளருக்குக் கூட தகவல் தெரிவிக்காமல் கணினியில் சொத்து வரியை அதிகமான அளவு உயர்த்தி உள்ளனர். இந்நிலையில் விருதுநகர் நகராட்சி 36வது வார்டு சங்கரநாராயணபுரம் தெருவைச் சேர்ந்தவர் சீதாலட்சுமி இவருக்கு இரண்டு மண் வீடுகள் இருந்துள்ளது. நாளடைவில் வீடு இடிந்து போய் விட்டது. இதற்கு சொத்து வரியாக ரூ.56 , ரூ.68 இருந்துள்ளது. தற்போது அந்த இரு மண் வீடுகளும் உடைந்து தரை மட்டமாகி காலியிடமாக உள்ளது. இந்நிலையில் தற்போது ரூ.56 என இருந்த சொத்து வரியை ரூ.1107 எனவும், ரூ.68 என இருந்த வரியை ரூ.660 ஆகவும் உயர்த்தியுள்ளனர்.
சீதாலட்சுமியின் மகள் அன்புரேவதி, நகராட்சி கமிஷனருக்கு தரைமட்டமான வீட்டின் புகைப்படங்களுடன் பலமுறை புகார் மனு அளித்துள்ளார். ஆனாலும் நகராட்சி நிர்வாகம் செவிசாய்க்காமல் இருந்து வருகிறது.
இது குறித்து நகராட்சி கமிஷனர் சுகந்தி கூறியதாவது: என் பார்வைக்கு இதுவரை வரவில்லை. ஆய்வு செய்கிறேன், என்றார்.