/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஓய்வூதிய சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்
/
ஓய்வூதிய சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 13, 2025 06:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதிய சங்கத்தின் சார்பில் 2021 தேர்தல் வாக்குறுதிப்படி ஓய்வூதியதாரர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிளைத் தலைவர் கருப்பையா தலைமை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் சரஸ்வதி முன்னிலை வகித்தார். சங்க நிர்வாகிகள் ராஜமாணிக்கம், ராம சீனிவாசன், புளுகாண்டி, முனீஸ்வரன், முத்தையா, கருப்பையா, திருமூர்த்தி பேசினர். மாவட்ட தலைவர் பால கிருஷ்ணன் நிறைவுரையாற்றினார். முன்னாள் பொருளாளர் பிரகாசம் நன்றி கூறினார்.

