ADDED : அக் 01, 2024 11:48 PM
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் தியாகராஜா மேல்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது. ஊர் தலைவர் முருகன் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் செல்வராணி வரவேற்றார்.
நகராட்சி தலைவர் ரவிக் கண்ணன் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். விழாவில் பள்ளி நிர்வாகிகள், ஊர் நிர்வாகஸ்தவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். உடற்கல்வி ஆசிரியர் ராமநாதன் நன்றி கூறினார்.
* குருஞானசம்பந்தர் ஹிந்து மேல்நிலைப் பள்ளியில் பள்ளி தாளாளர் கிருஷ்ணன் தலைமையில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது.
தலைமையாசிரியர் கண்ணன் வரவேற்றார். நகராட்சி தலைவர் ரவிக்கண்ணன் மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கி பேசினார். விழாவில் பள்ளி நிர்வாகிகள் முத்து பட்டர், மலையன், வெங்கட்ராமன், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.