sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

டிச.16 முதல் கோமாரி நோய் தடுப்பூசி பணி துவக்கம்

/

டிச.16 முதல் கோமாரி நோய் தடுப்பூசி பணி துவக்கம்

டிச.16 முதல் கோமாரி நோய் தடுப்பூசி பணி துவக்கம்

டிச.16 முதல் கோமாரி நோய் தடுப்பூசி பணி துவக்கம்


ADDED : டிச 10, 2024 04:41 AM

Google News

ADDED : டிச 10, 2024 04:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: தேசிய கால்நடை நோய் தடுப்புத்திட்டத்தின் கீழ் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் கால்நடைகளின் கால், வாய் பகுதிகளை தாக்கும் கோமாரி நோய்க்கு தடுப்பூசி முகாம் கோடை, குளிர் காலங்கள் என ஆண்டுக்கு இரு முறை நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. தற்போது கால்நடைகளை தாக்கும் நோய்கள் பரவுவதற்கு ஏற்ற சூழ்நிலை உள்ளது.

இதனால் மாடுகளுக்கு வாய், கால், மடியில் கொப்புளங்கள், கறவை மாடுகளின் பால் உற்பத்தி குறைதல், கன்றுகள் இறப்பு, சினைப்பிடிக்காதிருத்தல் உள்ளிட்ட அறிகுறிகள் பரவலாக தென்படுகிறது.

நடமாடும் கால்நடை மருத்துவ ஆம்புலன்ஸ்கள் மூலம் ஒவ்வொரு பகுதிக்கும் தேவையான மருத்துவ சேவைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.

நோய்பரவலை கட்டுப்படுத்த அனைத்து அரசு கால்நடை மருத்துவமனைகள், மருந்தகங்களில் தடுப்பூசிகள் கையிருப்பில் வைத்து செலுத்தப்படுகிறது.

இந்நிலையில் நாடு முழுதும் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணியை டிச.,16ல் இருந்து துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கால்நடைகளை தாக்கும் கோமாரி நோய் பரவாமல் தடுக்கப்படும்.






      Dinamalar
      Follow us