/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மழையால் வாகன காப்பக சுவர் இடிந்து கார்கள் சேதம்
/
மழையால் வாகன காப்பக சுவர் இடிந்து கார்கள் சேதம்
ADDED : டிச 24, 2024 04:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த கன மழையால் வாகன காப்பக சுவர் இடிந்து நிறுத்தி இருந்த 12 கார்கள் சேதமானது.
ராஜபாளையம் ரயில்வே மேம்பாலம் அருகே கோபால் என்பவர் வாகன காப்பகம் நடத்தி வருகிறார். நுாற்றுக்கும் மேற்பட்டோர் கார்களை மாத வாடகை அடிப்படையில் பலர் நிறுத்தி வந்தனர்.
நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையால் வாகன காப்பக சுற்றுச்சுவரை ஒட்டி ஓடையில் அடைப்பு ஏற்பட்டு 10 அடி உயரம் கொண்ட சுவர் கூரையுடன் கார்களின் மீது விழுந்தது. இதில் 12 கார் 1 ஆட்டோ சேதமானது. தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.