/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கு டிச.19 க்கு ஒத்திவைப்பு
/
ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கு டிச.19 க்கு ஒத்திவைப்பு
ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கு டிச.19 க்கு ஒத்திவைப்பு
ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கு டிச.19 க்கு ஒத்திவைப்பு
ADDED : நவ 22, 2025 12:09 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஆவினில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உட்பட 8 பேர் மீதான வழக்கு விசாரணையை டிச., 19க்கு விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் மாவட்ட முதன்மை அமர்வு நீதி மன்றம் ஒத்திவைத்தது.
விருதுநகர் மாவட்டம் சாத்துாரைச் சேர்ந்தவர் ரவீந்திரன். இவரது சகோதரி மகனுக்கு ஆவினில் வேலை வாங்கித் தருவதாக கூறி அ.தி.மு.க., நிர்வாகி விஜய நல்லதம்பி ரூ.30 லட்சம் வாங்கி கொண்டு ஏமாற்றியதாக 2021ல் மாவட்ட குற்ற பிரிவு போலீசில் ரவீந்திரன் புகார் அளித்தார்.
ரவீந்திரன் புகாரில் விஜயநல்ல தம்பி, ராஜேந்திர பாலாஜி, முத்துப்பாண்டி, மாரியப்பன், பாண்டியராஜன், ரவி கணேசன், ராமகிருஷ்ணன், நாகேஷா ஆகியோர் மீது ஒரு வழக்கும், ராஜேந்திர பாலாஜி பணம் பெற்றுக்கொண்டு தன்னை ஏமாற்றியதாக விஜய் நல்லதம்பி அளித்த புகாரில் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 7 பேர் மீது ஒரு வழக்கும் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்தனர். இவ்வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் வழக்குகளில் இருந்து விடுவிக்க கோரி ராஜேந்திர பாலாஜி தரப்பில் மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளது.
இவ்வழக்குகளின் விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று வழக்குகள் நீதிபதி ஜெயக்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 4 பேர் ஆஜராகவில்லை. முத்துப்பாண்டி தரப்பில் வழக்கிலிருந்து விடுவிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையை டிச. 19 க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

