நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி அருகே புதுக்கோட்டையில் சிவகாசி தீயணைப்பு நிலையம் சார்பில் வடகிழக்கு பருவமழை ஒத்திகை பயிற்சி நடந்தது.
இதற்காக அங்குள்ள ஊருணியில் மீட்புப் பணிகள் குறித்து தீயணைப்பு வீரர்கள் செயல்முறை ஒத்திகை பயிற்சி செய்து காண்பித்தனர்.
தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன், அப்பகுதி மக்களுக்கு பருவமழையை எதிர்கொள்ளுதல் குறித்தும் மீட்பு பணி குறித்தும் விளக்கினார். தீயணைப்பு வீரர்கள் பங்கேற்றனர்.