sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

குடியிருப்போர் குரல்

/

குடியிருப்போர் குரல்

குடியிருப்போர் குரல்

குடியிருப்போர் குரல்


ADDED : நவ 12, 2025 12:11 AM

Google News

ADDED : நவ 12, 2025 12:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார்: சாத்துார் படந்தால் ஊராட்சி மருதுபாண்டியர் நகரில் குண்டும் குழியுமான ரோடு, மூடி கிடக்கும் சுகாதார வளாகம், குப்பைகளை எரிப்பதால் சூழும் புகைமண்டலம் என மருது பாண்டியர் நகர் மக்கள் அவதிப்படு கின்றனர்.

படந்தால் மருது பாண்டியர் நகரில் வசித்து வரும் குடியிருப்போர்கள் நலச்சங்க உறுப்பினர்கள் கணேசன், அய்யப்பன், கார்த்திக், சரவணன், சுப்புராஜ், ஜெய் கணேஷ் ஆகியோர் கலந்துரையாடிய போது கூறியதாவது:

நடுத்தெருவில் மட்டும் குடிநீர் குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டதால் ஆங்காங்கே ரோடு சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வைப்பாற்றில் நேரடியாக கலப்பதால் ஆற்றில் கழிவு நீர் குளம் போல் தேங்கியுள்ளது.

இதன் காரணமாக குடியிருப்பு பகுதியில் உள்ள போர்வெல் தண்ணீர் பாதித்து கருமையாகவும் மிகவும் உப்பாகவும் உள்ளது.

ஆற்றில் கழிவு நீர் சுத்தம் செய்யப்படாமல் கலப்பது தான் காரணமாக உள்ளது.

ஆற்றில் நகராட்சிக்கும் ஊராட்சிக்கும் என தனித் தனி உறை கிணறுகள் உள்ளன. தற்போது கழிவுநீர் தேங்கி நிற்பதால் இந்த உறை கிணற்றில் இருந்து எடுக்கப்படும் குடிநீரின் சுவை உப்புச்சுவையாக மாறிவிட்டது.

இதனால் மக்கள் மினரல் வாட்டரை விலைக்கு வாங்கி குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர்.

ஆற்றுப்பகுதியில் குப்பை கழிவுகள் அதிக அளவில் கொட்டப்படுகின்றன. கழிவுகளை தீ வைத்து எரிப்பதால் ஏற்படும் புகையால் குடியிருப்பு வாசிகள் அவதிப்படுகின்றனர்.

மருதுபாண்டியர் நகர், வசந்தம் நகர் முத்துராமலிங்கபுரம் பகுதியில் வசிக்கும் பலரும் வைப்பாற்று கரையில் அமைந்துள்ள சாலை வழியாக வேலைக்கும் அரசு மேல்நிலைப்பள்ளிக்கும் செல்கின்றனர்.

இந்த சாலை அருகில் குப்பை கொட்டப்பட்டு தீ வைக்கப்படுவதால் அவ்வழியாக நடந்து செல்பவர்கள் மூச்சு திணறலுக்கு ஆளாகி தவிக்கும் நிலை உள்ளது.

நகர் அருகில் உள்ள ஆற்றில் காடு போல முள்செடிகள் வளர்ந்துள்ளன. இவற்றில் இருந்து இரவு நேரத்தில் விஷப்பூச்சிகள் குடியிருப்பு பகுதிகளை நோக்கி படையெடுக் கின்றன. எனவே முள் செடியை அகற்ற வேண்டும்.

திறந்தவெளி கழிப் பறையை ஒழிப்பதற்காக ஊராட்சியில் பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டு உள்ளது.

ஆனால் மக்கள் இந்த பொது சுகாதார வளாகத்தை பயன்படுத்த முடியாத வகையில் பூட்டு போட்டு பூட்டியுள்ளனர்.இதனால் ரோட்டின் ஓரங்களை மக்கள் திறந்தவெளி கழிப்பறையாக பயன் படுத்தி வருகின்றனர்.

குடியிருப்பு அருகில் குப்பைகள் கொட்டுவதையும் தீ வைத்து எரிப்பதை தடுக்க வேண்டும்.திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல் படுத்த வேண்டும். என அவர்கள் கலந்துரை யாடினர்.






      Dinamalar
      Follow us