sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ரூ. 3.95 கோடியில் நலத்திட்ட உதவிகள்; துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்

/

ரூ. 3.95 கோடியில் நலத்திட்ட உதவிகள்; துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்

ரூ. 3.95 கோடியில் நலத்திட்ட உதவிகள்; துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்

ரூ. 3.95 கோடியில் நலத்திட்ட உதவிகள்; துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்


ADDED : அக் 02, 2024 06:58 AM

Google News

ADDED : அக் 02, 2024 06:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : விருதுநகரில் 450 ஊராட்சிகளுக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் விளையாட்டு உபகரணங்கள், 2396 பயனாளிகளுக்கு ரூ. 3.95 கோடியில் நலத்திட்ட உதவிகளை துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 450 ஊராட்சிகளுக்கும் முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி விருதுநகரில் துணை முதல்வர் உதயநிதி தலைமையில் நடந்தது.

2024 முதல்வர் கோப்பைக்கான போட்டிகளில் மாவட்ட அளவில் வென்ற 2111 பேருக்கு ரூ. 42.96 லட்சம் பரிசு தொகை, 255 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 45.38 லட்சத்தில் இலவச வீட்டு மனை பட்டா, 30 மாற்றுத் திறனாளிகளுக்கு சுயதொழிலுக்கு வங்கி கடன் மானியம், ஆவின் விற்பனை நிலையம் அமைத்தல், மூன்று சக்கர டூவீலர் ரூ. 22.10 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் என மொத்தம் ரூ.3.95 கோடிக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மூர்த்தி, இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்யா மிஸ்ரா, எம்.பி., க்கள் மாணிக்கம் தாகூர், ராணி, ராபர்ட் ப்ரூஸ், நவாஸ்கனி, எம்.எல்.ஏ.,க்கள் சீனிவாசன், அசோகன், ரகுராமன், தங்கபாண்டியன், சிவகாசி மாநாகராட்சி மேயர் சங்கீதா, தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாதரெட்டி, விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன், வாள்வீச்சு விளையாட்டு வீரர் ஜிஷோ நிதி, கூடைபந்து வீராங்கனை சுந்தரி உள்பட பலர் பங்கேற்றனர்.

இதில் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் சுப்பாராஜ், தி.மு.க., விளையாட்டு மேம்பாட்டு அணி தெற்கு மாவட்ட அமைப்பாளர் ரமேஷ், தலைமைச் செயற்குழு உறுப்பினர் சாகுல்கமீது, தெற்கு, வடக்கு ஒன்றியச் செயலாளர்கள் பாலகணேசன், பொன்ராஜ், தி.மு.க., தெற்கு மாவட்ட பொருளாளர் பிரபாகரன், தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் சிவப்பிரகாசம், நகராட்சி தலைவர் சுந்தரலட்சுமி, நகரச் செயலாளர் மணி, நகராட்சி துணைத் தலைவர் பழனிசாமி, விளையாட்டு மேம்பாட்டு அணி வடக்கு மாவட்ட அமைப்பாளர் ராஜகுரு, மாவட்ட துணை அமைப்பாளர்கள் வெயில்ராஜ், மாதவன், சரவணக்குமார், கார்த்திக், சுந்தரமூர்த்தி, ராஜ்குமார், முன்னாள் திருத்தங்கல் நகராட்சி துணைத் தலைவர் பொன் சக்திவேல், சிவகாசி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் செல்வம், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us