/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பனை மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.6.30 லட்சம் ஒதுக்கீடு
/
பனை மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.6.30 லட்சம் ஒதுக்கீடு
பனை மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.6.30 லட்சம் ஒதுக்கீடு
பனை மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.6.30 லட்சம் ஒதுக்கீடு
ADDED : ஆக 07, 2025 05:14 AM
விருதுநகர் : விருதுநகர் மாவட் டத்திற்கு பனை மேம்பாட்டு திட்டத்தில் ரூ.6.30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பனை மரத்தின் பரப்பை அதிகரிக்கும் வகையில் விவசாயிகள் தங்கள் வயலின் வரப்புகளிலும், வயல் ஓரங்களிலும் நடவு செய்து பயன்பெறும் வகையில் பனை மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் தோட்டக்கலைத்துறை மூலம் 40 ஆயிரம் பனை விதைகள் வினியோகம் செய்ய ரூ.1.20 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒரு பயனாளி அதிக பட்சமாக 50 விதைகளும், பொது இடங்களில் தொண்டு நிறு வனங்கள், ஊராட்சிகள் மூலம் நடுவதற்கு அதிக பட்சமாக 100 விதைகளும் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும். மேலும் 600 பனங்கன்றுகள் வினியோகம் செய்ய ரூ.60 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பனை சார்ந்த சிறு தொழில் முனைவோர்களாக 160 சதுர அடியில் நிரந்தர மதிப்புக் கூட்டப்பட்ட பனைபொருட்கள் தயாரிக்கும் கூடம் அமைக்க 9 அலகுகள் ரூ.4.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
விரும்புவோர் https://tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்திலோ, உழவன் செயலியில் பதிவு செய்தோ அல்லது அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலு வலகங்களை அணுகி ஆவணங்கள் சமர்ப்பித்து பயன்பெறலாம் என கலெக்டர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.