/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசி ரோட்டில் கொட்டி கிடக்கும் மணல்
/
சிவகாசி ரோட்டில் கொட்டி கிடக்கும் மணல்
ADDED : டிச 20, 2024 02:29 AM

சிவகாசி: சிவகாசி ரோடுகளில் கொட்டிக் கிடக்கும் மணலால் வாகன ஓட்டிகள்விபத்தில் சிக்குகின்றனர். மேலும் மழைக் காலங்களில் சகதியாக ரோடு மாறி விடுவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
சிவகாசி பஸ் ஸ்டாண்டிலிருந்து சாத்துார் செல்லும் ரோடு, காந்தி ரோடு, ஸ்ரீவில்லிபுத்துார் ரோடு பைபாஸ் ரோடு உள்ளிட்ட பல்வேறு ரோடுகளில் இருபுறமும் பாதியளவிற்கு மணல் கிடக்கின்றது.
அதிலும் குறிப்பாக சென்டர் மீடியம் அமைக்கப்பட்ட ரோடுகள் குறுகியதாக மாறிய நிலையில் அதிலும் மணல்கள் ஆக்கிரமித்துள்ளதால் ரோடு மேலும் குறுகி விட்டது. இதில் டூவீலரில் செல்பவர்கள் அடிக்கடி சறுக்கி விழுகின்றனர்.
சைக்கிளில் வரும் பள்ளி மாணவர்கள் தடுமாறுகின்றனர். எதிர்பாராத விதமாக பிரேக் பிடித்தாலும் விலகினாலும் மணல் வாரி விடுகின்றது. மழைக்காலங்களில் ரோட்டில் உள்ள மணல்கள் சகதியாக மாறி விடுவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகின்றது.
எனவே நகர் முழுவதும் ரோட்டில் கிடக்கும் மணலை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.