sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 11, 2025 ,ஆவணி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சிறப்பு குழந்தைகளுக்கு உணர்வு திறன் பூங்காக்கள்

/

சிறப்பு குழந்தைகளுக்கு உணர்வு திறன் பூங்காக்கள்

சிறப்பு குழந்தைகளுக்கு உணர்வு திறன் பூங்காக்கள்

சிறப்பு குழந்தைகளுக்கு உணர்வு திறன் பூங்காக்கள்


ADDED : ஆக 16, 2025 09:21 PM

Google News

ADDED : ஆக 16, 2025 09:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்:தமிழகத்தில் ஆறு மாவட்ட தொடக்கநிலை இடையீட்டு மையங்களில், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த உணர்வுதிறன் பூங்காக்கள் அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன.

விருதுநகர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருப்பூர், ஈரோடு, சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில், தலா, 15 லட்சம் ரூபாய் வீதம், 90 லட்சம் ரூபாயில் டி.இ.ஐ.சி.,யில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த உணர்வு திறன் பூங்காக்கள் அமைக்க திட்டமிடப்பட்டு, பணிகள் துவங்கி நடந்து வருகின்றன.

இப்பூங்காக்களில், புலன் உணர்வு ஒலிக்கான ஒலி பலகைகள், நடைபாதைகள், ஊஞ்சல்கள், சறுக்குகள், விளையா ட்டு உபகரணங்கள் உள்ளிட்ட குழந்தைகளின் உணர்வு செயலாக்கக் கோளாறுகளை, சிகிச்சை அளித்து சரிசெய்வதற்காக வடிவமைக்கப்பட்ட வசதிகள் அமைக்கப்படுகின்றன. இப்பூங்காவைச் சுற்றி தடுப்புகள் அமைத்து, விலங்குகள் நுழைவதும் தடுக்கப்படவுள்ளது.

இதன் மூலம் சிறப்பு குழந்தைகள், தங்கள் சூழலில் இருந்து புலன் தொடுதல், பார்வை, ஒலி, இயக்கம், உடல் விழிப்புணர்வு போன்ற பல்வேறு புலன்களைத் துாண்டி தகவல்களைச் செயலாக்கி, பதிலளிக்கும் திறனை வளர்த்து மேம்படுத்த உதவும் வகையில் உணர்வு ஒருங்கிணைப்பு, சிகிச்சை பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.






      Dinamalar
      Follow us