/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
முன்னணி நிறுவனங்களின் பணிகளில் ஸ்ரீவித்யா கல்வி குழும மாணவர்கள்
/
முன்னணி நிறுவனங்களின் பணிகளில் ஸ்ரீவித்யா கல்வி குழும மாணவர்கள்
முன்னணி நிறுவனங்களின் பணிகளில் ஸ்ரீவித்யா கல்வி குழும மாணவர்கள்
முன்னணி நிறுவனங்களின் பணிகளில் ஸ்ரீவித்யா கல்வி குழும மாணவர்கள்
ADDED : அக் 01, 2025 12:06 AM

ஸ்ரீ வித்யா கல்வி குழும தலைவர் ஆர்.திருவேங்கடராமானுஜதாஸ் கூறியதாவது: ஸ்ரீவித்யா குழுமம் 2006ல் நிறுவப்பட்டது. இந்த குழுமத்தில் பொறியியல் கல்லுாரி, கல்வியியல் கல்லுாரி, ஆசிரியர் பயிற்சி நிறுவனம், மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கலை அறிவியல் கல்லுாரி ஆகியவை ஒரே வளாகத்தில் இயங்கி வருகின்றன.
பொறியியல் கல்லுாரியில் 7 யூ.ஜி., திட்டங்கள், 4 பி.ஜி., திட்டங்கள் உள்ளன. ஏ.ஐ.சி.டி.இ.,யால் அங்கீகரிக்கப்பட்டு அண்ணா பல்கலையால் இணைக்கப்பட்டு ஸ்ரீவித்யா குரூப் ஆப் இன்ஸ்டிடியூஷன்ஸால் நிர்வகிக்கப்படுகிறது.
பணிச் சூழலுக்கு ஏற்ப மாணவர்களை ஸ்ரீவித்யா குழுமம் தயார்படுத்துவதால் 92 சதவீதம் மாணவர்கள் பல்வேறு முன்னணி நிறுவனங்களில் பணியில் அமர்த்தப்படுகின்றனர். உலகம் முழுவதும் உள்ள பன்னாட்டு நிறுவனங்கள் பலவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்ததன் மூலம் மாணவர்களுக்கு உலகாளாவிய வேலைவாய்ப்புகளை ஸ்ரீவித்யா கல்வி குழுமம் ஏற்படுத்தி தருகிறது.
இதற்காகவே பிரத்யேக வேலைவாய்ப்பு பயிற்சி மையம் செயல்படுகிறது. பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தில் 75 சதவீதம் முதல் நுாறு சதவீதம் வரை சலுகை அளித்து அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு உந்து கோலாக இருக்கிறது.
மாணவர்களுக்கு தனி மனித ஒழுக்கம், ஆளுமைத்திறன், உடற்பயிற்சிகளின் அவசியம், வேற்றுமையில் ஒற்றுமை முதலான நல்லொழுக்கங்களை அவர்களின் மனதில் வளர்க்க எங்களது பேராசிரயர்கள் அயராது உழைத்து வருகின்றனர்.