/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அம்ரித் பாரத் திட்ட பணிகளை தொய்வு இல்லாமல் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
/
அம்ரித் பாரத் திட்ட பணிகளை தொய்வு இல்லாமல் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
அம்ரித் பாரத் திட்ட பணிகளை தொய்வு இல்லாமல் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
அம்ரித் பாரத் திட்ட பணிகளை தொய்வு இல்லாமல் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
ADDED : பிப் 05, 2025 04:50 AM
மத்திய அரசின் சார்பில் நாடு முழுவதும் உள்ள சிறிய ரயில் நிலையங்களில் பயணிகளுக்கான நவீன வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்தில் அம்ரித் பாரத் திட்டம் துவங்கப்பட்டது.
இதன்படி அதிக வருவாய், பாரம்பரிய நகரங்கள், முக்கிய வழித்தடம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு கோட்டத்திற்கு 15 ரயில்வே ஸ்டேஷன் என்ற அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டது.
இதன்படி மதுரை ரயில்வே கோட்டத்தில் விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம் உட்பட 15 ரயில்வே ஸ்டேஷன்கள் தேர்வு செய்யப்பட்டு பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் கடந்த பல மாதங்களாக நடந்து வருகிறது.
ஸ்டேஷன் போர்டிகோ பகுதியில் அலங்கார முகப்பு அமைத்தல், நடை மேடை மேம்படுத்துதல், வாகன காப்பகம், காத்திருப்பு அறைகள், சுகாதார வளாகம், டிஜிட்டல் டிஸ்ப்ளே போர்டுகள், லிப்ட் வசதி, நிழற்குடை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்ய திட்டமிடப்பட்டது.
இதில் ஸ்ரீவில்லிபுத்துார் ரயில்வே ஸ்டேஷனில் லிப்ட், டிஜிட்டல் டிஸ்ப்ளே போர்டுகள் செயல்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் இன்னும் வாகன காப்பகம் செயல்பாட்டுக்கு வரவில்லை.
ரிசர்வேஷன் பயணிகளுக்கான வெயிட்டிங் ஹால், தங்கும் அறை கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இங்கு பணிகள் துவங்கி பல மாதமாகியும் இன்னும் முடிவடையவில்லை.
ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷனில் அதிகளவில் பயணிகள் வந்து செல்லும் நிலையில் பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இங்கு இரண்டாவது நுழைவாயில், காத்திருப்போர் அறை, நடைமேடை மேற்கூரை பணிகள் மந்தமாக நடக்கிறது. லிப்ட் மற்றும் டிஜிட்டல் டிஸ்ப்ளே போர்டுகள் மற்றும் செயல்பாட்டில் உள்ளது .
இதே போல் தினமும் 30-க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்லும் விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனில் பிரதான நுழைவாயில் பகுதியில் பழைய கட்டடம் இடிக்கப்பட்டுள்ளது.
போர்டிகோ மட்டும் அழகுபடுத்த பட்டுள்ளது. ஆனாலும் பயணிகள் வந்து செல்லும் வழியில் கட்டுமான பணிகள் நடப்பதால், கடைசி நேரத்தில் அவசரமாக வரும் பயணிகள் சிரமத்திற்கு ஆளாக வேண்டிய நிலை உள்ளது.
எனவே, இந்த மூன்று ரயில்வே ஸ்டேஷன்களிலும் அம்ரித் பாரத் திட்ட பணிகளை தொய்வு இல்லாமல் விரைந்து முடித்து மக்கள் சிரமம் இன்றி வந்து செல்லும் நிலையை ஏற்படுத்த ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்.