ADDED : அக் 21, 2025 03:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: திருநெல்வேலியை சேர்ந்தவர்கள் திருமலை மகன் ஆனந்த், 22.மணிராஜ் மகன் ஜெயக்குமார், 24. இருவரும் டூவீலரில் (இருவரும் ஹெல்மெட் அணியவில்லை) அக்.18 இரவு 10:30 மணிக்கு சிவகாசியில் பட்டாசு வாங்குவதற்காக வந்தனர்.
சாத்துார் படந்தால் விலக்கு அருகே டூவீலர் வந்தபோது பின்னால் ஆந்திர பிரதேசம் உன்ன வள்ளி குண்டூரை சேர்ந்த தொப்புளபுடிபாசையா, 36. ஒட்டி வந்த லாரி மோதியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர்.விருதுநகர் அரசு மருத்துவமனையில் ஜெயக் குமார் பலியானார். ஆனந்த் சிகிச்சை பெற்று வருகிறார். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.