/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வனவிலங்குகளால் பயிர்கள் சேதமா தகவல் தெரிவிக்க அலைபேசி எண்கள்
/
வனவிலங்குகளால் பயிர்கள் சேதமா தகவல் தெரிவிக்க அலைபேசி எண்கள்
வனவிலங்குகளால் பயிர்கள் சேதமா தகவல் தெரிவிக்க அலைபேசி எண்கள்
வனவிலங்குகளால் பயிர்கள் சேதமா தகவல் தெரிவிக்க அலைபேசி எண்கள்
ADDED : அக் 24, 2025 02:24 AM
சிவகாசி: சிவகாசி வனச்சரக அலுவலர் பூவேந்தன் செய்தி குறிப்பு: சிவகாசி, சாத்துார், வெம்பக்கோட்டை தாலுகாக்களில் மான், மயில், காட்டுப்பன்றி, குரங்கு போன்ற வனவிலங்குகளால் விவசாயப் பயிர்கள் சேதமடைவது குறித்தும், சிவகாசி, சாத்துார், வெம்பக்கோட்டை, விருதுநகர் தாலுகாக்களில் தெருநாய்கள் கடித்து அல்லது சந்தேகத்திற்கிடமான சூழலில் வனவிலங்குகள் இறந்து கிடப்பதை மக்கள் கண்டால் உடனடியாக வனத்துறைக்கு தகவல்களை தெரிவிக்க வேண்டும்.
இவற்றை வனச்சரக அலுவலர் சிவகாசி - 84890 54853, வனக்காப்பாளர் - 97894 48985, துணை இயக்குனர் அலுவலகம், ஸ்ரீவில்லிபுத்துார் - 04563 260565 என்ற தொலைபேசி எண்களில்தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும்.

