ADDED : அக் 26, 2024 04:49 AM

சிவகாசி: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக சிவகாசியில் இருந்து தட்டாவூரணி வழியாக விளாம்பட்டி செல்லும் ரோட்டில் வாறுகால் துார்வாரப்பட்டது.
சிவகாசியிலிருந்து தட்டாவூரணி வழியாக விளாம்பட்டி செல்லும் ரோட்டில் இருபுறமும் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வாறுகால் அமைக்கப்பட்டது.
மழைக்காலங்களில் தண்ணீர் வாறுகால் வழியாக வெளியேறி கண்மாய், குளத்திற்கு சென்றது. ஆனால் தற்போது ரோட்டில் இருபுறமும் உள்ள வாறுகால் ஆங்காங்கே சேதமடைந்துள்ளது.
தவிர முட்புதர்களும் ஆக்கிரமித்துள்ளது. தவிர குப்பையையும் வாறுகாலில் கொட்டி விடுகின்றனர். இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேற வழி இன்றி ரோட்டில் ஓடுகின்றது. முழங்கால் அளவிற்கு தண்ணீர் ரோட்டில் தேங்கி விடுவதால் டூ வீலர் உள்ளிட்ட வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகின்றது.
எனவே வாறுகாலை சீரமைத்து துார்வார வேண்டும் என தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக இப்பகுதியில் வாறுகால் உடனடியாக துார்வாரப்பட்டது.
கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், தற்போது மழைநீர் செல்வதற்கு ஏதுவாக வாறுகால் துார்வாரப்பட்டுள்ளது.
விரைவில் சேதம் அடைந்த பகுதிகள் சீரமைக்கப்படும் என்றார்.