/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கோயில் காவலாளிகள் கொலை வழக்கில் கைதானவர் தப்ப முயன்றதால் கை,கால் முறிவு
/
கோயில் காவலாளிகள் கொலை வழக்கில் கைதானவர் தப்ப முயன்றதால் கை,கால் முறிவு
கோயில் காவலாளிகள் கொலை வழக்கில் கைதானவர் தப்ப முயன்றதால் கை,கால் முறிவு
கோயில் காவலாளிகள் கொலை வழக்கில் கைதானவர் தப்ப முயன்றதால் கை,கால் முறிவு
ADDED : நவ 20, 2025 02:49 AM

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலாளிகள் கொலை, கொள்ளை வழக்கில் தலை மறைவாக இருந்த முனியசாமி 40, போலீசாரிடம் இருந்து தப்ப பாலத்தில் இருந்து குதித்த போது கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயிலில் நவ.,10ல் பணியில் இருந்த இரவு காவலாளிகள் பேச்சிமுத்து 50, சங்கரபாண்டியன் 65, வெட்டி கொலை செய்யப்பட்டு உண்டியல் உடைத்து கொள்ளை அடிக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் தேவதானத்தை சேர்ந்த நாகராஜ் 25, என்பவரை நவ.,12ல் பிடித்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை மீட்க அழைத்துச் சென்றனர். அப்போது நாகராஜ் போலீசாரை தாக்கியதால் காலில் சுட்டு பிடிக்கப்பட்டார்.
தலைமறைவாக இருந்த தேவதானத்தை சேர்ந்த முனியசாமியை, ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷனில் தனிப்படை போலீசார் பிடித்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள், உடைக்கப்பட்ட கேமரா பதிவு, டி.வி.ஆர்., கொலைக்கு பயன்படுத்திய அரிவாள் போன்றவற்றை தேவதானம் இரட்டை பாலம் அருகே பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது.
முனியசாமியை அழைத்துச் சென்று பொருட்களை மீட்ட நிலையில் நேற்று மதியம் பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து தப்ப முயன்றார். இதில் அவருக்கு வலது கால், வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவரை போலீசார் மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

