/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வாகன நிறுத்தமாகுது நிழற்குடை பயன்படாமல் போகுது வாகன நிறுத்தமான நிழற்குடை அவதியில் பயணிகள்
/
வாகன நிறுத்தமாகுது நிழற்குடை பயன்படாமல் போகுது வாகன நிறுத்தமான நிழற்குடை அவதியில் பயணிகள்
வாகன நிறுத்தமாகுது நிழற்குடை பயன்படாமல் போகுது வாகன நிறுத்தமான நிழற்குடை அவதியில் பயணிகள்
வாகன நிறுத்தமாகுது நிழற்குடை பயன்படாமல் போகுது வாகன நிறுத்தமான நிழற்குடை அவதியில் பயணிகள்
ADDED : மார் 19, 2025 04:55 AM

விருதுநகர்: விருதுநகர் சிவகாசி ரோட்டில் ஓட்டல் எதிரே உள்ள நிழற்குடை வாகன நிறுத்தம் போல் மாறிவிட்டதால் பயன்படாமல் உள்ளது. இதை சரி செய்ய வேண்டும்.
விருதுநகர் சிவகாசி ரோட்டில் இருந்து ஆமத்துாருக்கு செல்லும் வழியில் தனியார் ஓட்டல் நிறுத்தமாக செயல்படும் இடத்தில் நிழற்குடை உள்ளது.
இந்த நிழற்குடையை ஒரு வாகன காப்பகம் போல சிலர் பயன்படுத்துகின்றனர். இப்பகுதியில் கடைகள் ஆக்கிரமித்து விட்டதால் வாகன நிறுத்தம் இருக்குமிடம் தெரியாமல் போய்விட்டது.
இத்தகைய சூழலில் இந்த நிழற்குடையை வாகன நிறுத்தம் போன்று பலர் பயன்படுத்துகின்றனர்.
இதனால் பயணிகள் இந்த நிழற்குடையை பயன்படுத்துவதே குறைந்துள்ளது.
இந்த நிழற்குடையை முழு பயன்பாட்டிற்கு கொண்டு வந்து இவ்வழியாக வந்து செல்லும் அனைத்து பஸ்களும் இங்கேயே பயணிகளை ஏற்றிச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.