sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பானை ஓடுகளை ஆவணப்படுத்தும் பணி

/

பானை ஓடுகளை ஆவணப்படுத்தும் பணி

பானை ஓடுகளை ஆவணப்படுத்தும் பணி

பானை ஓடுகளை ஆவணப்படுத்தும் பணி


ADDED : நவ 12, 2024 11:51 PM

Google News

ADDED : நவ 12, 2024 11:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி ; விருதுநகர் மாவட்டம் விஜயகரிசல் குளம் மூன்றாம் கட்ட அகழாய்வில் புதிய குழிகள் தோண்டப்பட உள்ள நிலையில் கண்டெடுக்கப்பட்ட பானை ஓடுகளை ஆவணப்படுத்தும் பணி நடந்தது.

விஜய கரிசல்குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வில் இதுவரையிலும் தோண்டப்பட்ட 14 குழிகளில் உடைந்த நிலையில் சூடு மண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்டக் காய்கள், கண்ணாடி மணிகள், வட்ட சில்லு, தங்க மணி உள்ளிட்ட 2480க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஏற்கனவே தோண்டப்பட்ட 14 குழிகளில் அகழாய்வு பணி நிறைவு பெற உள்ள நிலையில் புதிய குழிகள் தோண்டப்பட உள்ளன.

இதனைத் தொடர்ந்து அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பானை ஓடுகளை ஆவணப் படுத்தும்பணி நடந்தது.அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுச்சாமி கூறுகையில்'' இங்கு முன்னோர்கள் தொழிற்கூடம் நடத்தியதற்கான ஏராளமான சான்றுகள் கிடைத்துள்ளன.

அதன்படி முழுமையான பானைகள், உடைந்த பானை ஓடுகள், சங்கு வளையல்கள் உள்ளிட்ட பொருட்கள் கிடைத்துள்ளன.

தற்போது வரை 14 குழிகளில் அகழாய்வு பணிகள் முடிந்துள்ளது. அடுத்ததாக புதிய குழிகள் தோண்டப்பட உள்ளன. இதற்கிடையில் கண்டெடுக்கப்பட்ட பானை ஓடுகளை ஆவணப்படுத்தும் பணி நடந்து வருகிறது'' என்றார்.






      Dinamalar
      Follow us