ADDED : செப் 19, 2024 04:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் மாணவர் சேவை மையம் சார்பில் இளம் பசுமை ஆர்வலர் பயிற்சி திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான பசுமை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் குழந்தை நல மருத்துவர் நிகில் ரத்தினவேல் பேசினார். அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் மரங்கள் குறித்து அறிந்து கொண்டனர்.
இதில் கல்லுாரி முதல்வர் சாரதி உள்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் நிர்மல் குமார், பாண்டியராஜன், என்.சி.சி., அதிகாரி அழகுமணிக்குமரன், என்.எஸ்.எஸ்., திட்ட அதிகாரிகள் அருஞ்சுனை குமார், செல்வம், செல்வநாதன் செய்தனர்.