/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரூ. 5 லட்சம் பட்டாசுகள் பறிமுதல் கோடவுனில் பதுக்கிய இருவர் கைது
/
ரூ. 5 லட்சம் பட்டாசுகள் பறிமுதல் கோடவுனில் பதுக்கிய இருவர் கைது
ரூ. 5 லட்சம் பட்டாசுகள் பறிமுதல் கோடவுனில் பதுக்கிய இருவர் கைது
ரூ. 5 லட்சம் பட்டாசுகள் பறிமுதல் கோடவுனில் பதுக்கிய இருவர் கைது
ADDED : ஜன 24, 2025 01:56 AM

சிவகாசி:விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் டிரான்ஸ்போர்ட் நிறுவன கோடவுனில் அனுமதியின்றி இருப்பு வைக்கப்பட்டிருந்த ரூ. 5 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சிவகாசி அருகே மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர்கள் திருப்பதி 35, விக்னேஷ். இவர்கள் விஜயலட்சுமி காலனியில் கற்குவேல் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வருகின்றனர். இந்நிறுவன கோடவுனில் வி.ஏ.ஓ.,ரவிராஜ், வருவாய்துறையினர் , கிழக்கு போலீசார் சோதனையிட்டனர்.
அங்கு 250 பெட்டிகளில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் அனுமதியின்றி இருப்பு வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. திருப்பதி, விக்னேஷை போலீசார் கைது செய்து பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.

