நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார் : சாத்துார் வெங்கடாஜலபதி கோயிலில் வருஷாபிஷேகவிழா, திருக்கல்யாணவிழா நடந்தது.
இதையொட்டி நேற்று காலை 6:00 மணிக்கு கோ பூஜை நடந்தது. பின்னர் மகா கணபதி ஹோமம், சுதர்சனஹோமம், மகா சாந்தி ஹோமம் மற்றும் விஷே அலங்காரம் தீபாராதனை நடந்தது
காலை 9:00 மணிக்கு வருஷாபிஷேகம் நடந்தது. மாலை 5:30 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. பின்னர் 7:15 மணிக்கு நான்கு ரதவீதி வழியாக சுவாமி வலம் வந்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.