/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கோடை துவங்கியும் குறையாத வெம்பக்கோட்டை அணை விவசாயிகள் மகிழ்ச்சி
/
கோடை துவங்கியும் குறையாத வெம்பக்கோட்டை அணை விவசாயிகள் மகிழ்ச்சி
கோடை துவங்கியும் குறையாத வெம்பக்கோட்டை அணை விவசாயிகள் மகிழ்ச்சி
கோடை துவங்கியும் குறையாத வெம்பக்கோட்டை அணை விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : மார் 06, 2024 05:36 AM

சிவகாசி, : கோடை துவங்கியும் வெம்பக்கோட்டை அணையில் தண்ணீர் குறையாததால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
சிவகாசி வெம்பக்கோட்டையில் வைப்பாறு அணை 1986 ல் கட்டப்பட்டது. 23 அடி உயரம் கொண்ட அணையில் 5 மதகுகள் உள்ளது. வெம்பக்கோட்டை, சூரார்பட்டி, கோட்டைபட்டி, கரிசல்குளம், சல்வார்பட்டி, ஏழாயிரம்பண்ணை, விஜய கரிசல்குளம் உட்பட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் 3300 எக்டேர் பாசன வசதி உடையது.
அணையிலிருந்து சிவகாசி மாநகராட்சிக்கு தினமும் 20 லட்சம் லிட்டர் குடிநீர் கொண்டு செல்லப்பட்டு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. அணையை சுற்றியுள்ள கிராம பகுதியில் கிணற்று பாசனத்திலும் விவசாய பணிகள் நடக்கிறது. வெம்பக்கோட்டை அணைக்கு மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து காயல்குடி, நிசப, சீவலப்பேரி உள்ளிட்ட கிளை ஆறுகளில் இருந்து தண்ணீர் வருகிறது.
இந்நிலையில் 2023ல் தொடர் மழை பெய்ததில் அணை முழுமையாக நிறைந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில் கோடை காலம் துவங்கும் முன்னரே வெயில் கொளுத்த துவங்கி உள்ளது.
ஆனாலும் 23 அடி உயரம் உள்ள அணையில் தற்போது 20 அடி உயரம் வரை தண்ணீர் உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். அதே சமயத்தில் கொளுத்தினால் தண்ணீர் மட்டம் குறைய வாய்ப்புள்ளது. கோடை மழை பெய்து மீண்டும் அணைக்கு தண்ணீர் வர வேண்டும் எனவும் விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

