/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வரதட்சணை கொடுமை : மூவர் மீது வழக்கு
/
வரதட்சணை கொடுமை : மூவர் மீது வழக்கு
ADDED : செப் 15, 2011 09:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை : மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் உட்பட மூவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் .
அருப்புக்கோட்டை அருகே பிள்ளையார் நத்தத்தை சேர்ந்தவர் வன்னியராஜ்,27. இவர் வெளி நாட்டில் வேலை பார்க்கிறார். இவருக்கும், அதே ஊரை சேர்ந்த மாரிலட்சுமி ,25, க்கும் கடந்த 2005 ல் திருமணம் நடந்தது. வரதட்சணையாக பெண் வீட்டார் 20 பவுன் நகை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் கொடுத்தனர். மேலும், 30 பவுன் நகை கேட்டு மாரிலட்சுமியை கணவர், மாமனார் திருமால், மாமியார் பாப்பா கொடுமைபடுத்தி, வீட்டை விட்டு துரத்தினர். மாரிலட்சுமி புகார்படி, அருப்புக்கோட்டை மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.