sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஆஸ்பத்திரியில் அனுமதித்த கர்ப்பிணி பலி : உடலை வாங்க மறுத்து போராட்டம்

/

ஆஸ்பத்திரியில் அனுமதித்த கர்ப்பிணி பலி : உடலை வாங்க மறுத்து போராட்டம்

ஆஸ்பத்திரியில் அனுமதித்த கர்ப்பிணி பலி : உடலை வாங்க மறுத்து போராட்டம்

ஆஸ்பத்திரியில் அனுமதித்த கர்ப்பிணி பலி : உடலை வாங்க மறுத்து போராட்டம்


ADDED : செப் 27, 2011 09:19 PM

Google News

ADDED : செப் 27, 2011 09:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்த கர்ப்பிணி இறந்ததால், அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் சந்தைபேட்டையை சேர்ந்தவர் மரியவில்லிபவுலினாள்,35 . கர்ப்பிணியான இவர் ,தனது நான்காவது குழந்தை பிரசவத்திற்காக கடந்த 24ம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் ,நேற்று முன் தினம் இரவு 10 மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. பணியிலிருந்த டாக்டர் வீட்டிற்கு சென்றதால் ,அவரை அழைத்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்தார். ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள்,' டாக்டர்களின் கவனக்குறைவால் தான் கர்ப்பிணி இறந்தார் என கூறி , முறையான சிகிச்சை அளிக்க தவறிய டாக்டர் மீராவை கைது செய்யவும், உடலை ஸ்ரீவி., டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தி , 'ஆஸ்பத்திரிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களிடம், சிவகாசி ஆர்.டி.ஓ., முனியசாமி பேச்சுவார்த்தை நடத்தினார். '' டாக்டர் மீரா மீது வழக்கு பதிவு செய்யவும், ஸ்ரீவி.,ஆஸ்பத்திரியிலேயே பிரேத பரிசோதனை செய்யவும்,'' கூற, போராட்டத்தை கைவிட்டனர்.இதையடுத்து பிரேத பரிசோதனைக்குபின் உடலை வாங்கி சென்றனர்.










      Dinamalar
      Follow us