/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷனில் அம்ரித் பாரத் திட்டத்தில் பணிகள் தீவிரம்
/
ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷனில் அம்ரித் பாரத் திட்டத்தில் பணிகள் தீவிரம்
ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷனில் அம்ரித் பாரத் திட்டத்தில் பணிகள் தீவிரம்
ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷனில் அம்ரித் பாரத் திட்டத்தில் பணிகள் தீவிரம்
ADDED : பிப் 22, 2024 05:52 AM

ராஜபாளையம் : ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷனில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் பயணிகளுக்கான வசதிகள் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார் ரயில்வே ஸ்டேஷன்களில் அம்ரித் திட்டத்தில் அனைத்து வசதிகளுடனான புதிய கட்டட பணிகள் நடைபெற்று வருகிறது.
இதன்படி ராஜபாளையத்தில ்ஏற்கனவே உள்ள நுழைவு பாதைக்கு வடக்கு பகுதியில் அகலமான நுழைவாயில், வாகன நிறுத்தம், ஏற்கனவே உள்ள இரண்டு நடை மேடைகளும் மலையடிப்பட்டி ரோடு வரை நீட்டிப்பு, புதிய 20 அடி அகலமான நடைமேடை மேம்பாலம், லிப்ட் கட்டுமான பணி நடந்து வருகிறது.
இது தவிர ஒவ்வொரு ரயில் பெட்டிகளும் கண்டறிவதற்கு டிஜிட்டல் திரைகள், மின் மயமாக்கல் முடிந்துள்ளது. தற்போது பூங்கா பணிகள் ரயில்வே ஸ்டேஷனில் சுற்றுவசுவர் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதனை அடுத்து சுவர்களில் வண்ண ஓவியங்கள் உள்ளிட்ட சில வேலைகளும் நைபெற உள்ளது.