sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ரூ.500 கொடுக்கல், வாங்கலில் தகராறு; தொழிலாளி கொலை

/

ரூ.500 கொடுக்கல், வாங்கலில் தகராறு; தொழிலாளி கொலை

ரூ.500 கொடுக்கல், வாங்கலில் தகராறு; தொழிலாளி கொலை

ரூ.500 கொடுக்கல், வாங்கலில் தகராறு; தொழிலாளி கொலை


ADDED : செப் 08, 2025 03:23 AM

Google News

ADDED : செப் 08, 2025 03:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் அருகே குல்லுார்சந்தையில் ரூ.500 கொடுக்கல், வாங்கலில் ஏற்பட்ட தகராறில் கூலி தொழிலாளி நாகராஜ் 27, கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்த கந்த சாமியை 22, சூலக்கரை போலீசார் கைது செய்தனர்.

குல்லுார்சந்தை தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர் நேற்று காலை 7:30 மணிக்கு அணைக்கட்டு கால்வாய் பாலத்திற்கு அருகே தலையில் வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்தார். இவரது உடலை போலீசார் கைப்பற்றி விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

போலீசாரின் விசாரணையில் நேற்று முன்தினம் இரவு 7:30 மணிக்கு நாகராஜ், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி, சிலர் சம்பவயிடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். இதில் நாகராஜ், கந்தசாமி இடையே ரூ.500 கொடுக்கல், வாங்கலில் தகராறு ஏற்பட்டது. இதில் நாகராஜை கந்தசாமி கொலை செய்தது தெரிந்தது.

கந்தசாமியை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us