/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தொழிலாளி கொலை தந்தை, மகன்கள் கைது
/
தொழிலாளி கொலை தந்தை, மகன்கள் கைது
ADDED : அக் 19, 2024 03:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி,:விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே நாரணாபுரத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர், 40; கட்டட தொழிலாளி. இவருக்கும், அருகில் வசிக்கும் மீன் வியாபாரி விநாயகமூர்த்தி, 53, என்பவர் குடும்பத்திற்கும் முன் விரோதம் இருந்து வந்தது.
நேற்று முன்தினம் இரவு, ராஜசேகருக்கும், விநாயகமூர்த்திக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது, விநாயகமூர்த்தி, அவரது மகன்கள் வைர பிரகாசம், 28, விக்ரம், 23, ஆகியோர் ராஜசேகரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர். மூவரையும் கிழக்கு போலீசார் கைது செய்தனர்.