புதருக்குள் இறந்த நிலையில் சிசு: வீசிச்சென்றவர் யார்?
புதருக்குள் இறந்த நிலையில் சிசு: வீசிச்சென்றவர் யார்?
ADDED : அக் 03, 2011 10:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி: ஊட்டி அருகே புதருக்குள் இறந்த நிலையில் சிசு கிடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சிசிவை வீசிச்சென்றவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகேயுள்ள முந்தலாவட்டம் வனப்பகுதியில் இன்று ஒரு செடிகொடிகள் நிறைந்த புதருக்குள் இறந்த நிலையில் சிசு ஒன்றி கிடந்துள்ளது. அதனை அங்கு வட்டமடித்து கொண்டிருந்த காக்கைகள் அந்த சிசுவை குதறி கொண்டிருந்ததால் அப்பகுதி பொதுமக்கள் போலீசில் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்தில் போலீசார் விரைந்து வந்து புதருக்குள் சிசுவை வீசிச்சென்றவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

