UPDATED : ஏப் 25, 2024 01:40 AM
ADDED : ஏப் 25, 2024 01:35 AM
சென்னை:சென்னை எழும்பூரில் இருந்து ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினத்துக்கும், விசாகப்பட்டினத்தில் இருந்து கர்நாடகா மாநிலம், எஸ்.எம்.வி.டி., பெங்களூருக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இது குறித்து, தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
★ விசாகப்பட்டினத்தில் இருந்து வரும் 27, மே 4, 11, 18, 25, ஜூன் 1, 8, 15, 22, 29ம் தேதிகளில் இரவு 7:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 8:45 மணிக்கு சென்னை எழும்பூர் வரும்
★ சென்னை எழும்பூரில் இருந்து வரும் 28, மே 5, 12, 19, 26, ஜூன் 2, 9, 16, 23, 30ம் தேதிகளில் காலை 10:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் அதேநாளில் இரவு 10:35 மணிக்கு விசாகப்பட்டினம் செல்லும்
★ விசாகப்பட்டினத்தில் இருந்து வரும் 27, மே 4, 11, 18, 25, ஜூன் 1, 8, 15, 22, 29ம் தேதிகளில் மதியம் 1:15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 7:30 மணிக்கு எஸ்.எம்.வி.டி., பெங்களூருக்கு செல்லும்
★ எஸ்.எம்.வி.டி., பெங்களூருவில் இருந்து வரும் 28, மே 5, 12, 19, 26 ஜூன் 2, 9, 16, 23, 30ம் தேதிகளில் காலை 8:50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் அதிகாலை 3:10 மணிக்கு விசாகப்பட்டினம் செல்லும்.
உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் இருந்து சென்னை, பெரம்பூர்
வழியாக கர்நாடகா மாநிலம், எஸ்.எம்.வி.டி., பெங்களூருக்கு சிறப்பு ரயில்கள்
இயக்கப்படுகின்றன.
இது குறித்து, தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பிரயாக்ராஜில் இருந்து வரும் 28, மே 5, 12, 19, 26, ஜூன் 2, 9, 16, 23,
30ம் தேதிகளில் இரவு 11:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த 3வது
நாளில் எஸ்.எம்.வி.டி., பெங்களூருக்கு செல்லும்
இந்த சிறப்பு ரயில்கள் காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக இயக்கப்படும். சிறப்பு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளது
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

