sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஜாதி ரீதியாக அரிவாள் வெட்டுப்பட்ட மாணவன் பிளஸ் 2வில் 469 மார்க்

/

ஜாதி ரீதியாக அரிவாள் வெட்டுப்பட்ட மாணவன் பிளஸ் 2வில் 469 மார்க்

ஜாதி ரீதியாக அரிவாள் வெட்டுப்பட்ட மாணவன் பிளஸ் 2வில் 469 மார்க்

ஜாதி ரீதியாக அரிவாள் வெட்டுப்பட்ட மாணவன் பிளஸ் 2வில் 469 மார்க்


ADDED : மே 06, 2024 11:43 PM

Google News

ADDED : மே 06, 2024 11:43 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி : நாங்குநேரியில் பள்ளி மாணவர்களால் ஜாதி ரீதியாக அரிவாளால் வெட்டப்பட்ட பிளஸ் 2 மாணவன் சின்னத்துரை 469 மதிப்பெண்கள் பெற்றார்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்தவர் சின்னத்துரை 18. இவரது தங்கை சந்திரா செல்வி. பட்டியல் இனத்தினர். ஆகஸ்ட் 9ம் தேதி இவருடன் பள்ளியில் பயிலும் வேறு ஜாதி மாணவர்கள், வீடு புகுந்து சின்னதுரையை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். தடுத்த சந்திரா செல்விக்கும் வெட்டு விழுந்தது.

ஜாதி ரீதியாக தாக்குதலுக்குள்ளான இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அவர் ஆசிரியர் உதவியுடன் பிளஸ் 2 தேர்வு எழுதினார்.

நேற்று வெளியான தேர்வு முடிவில் அவர் தமிழில் 71, ஆங்கிலத்தில் 93, பொருளாதாரத்தில் 42, வணிகவியலில் 84, கணக்குப்பதிவியலில் 85, கணிப்பொறி பயன்பாட்டில் 94 என 469 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். அவரை பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் தொலைபேசியில் பாராட்டினார்.






      Dinamalar
      Follow us