ADDED : மே 31, 2024 02:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மரக்காணம: கோட்டக்குப்பம் அருகே கீழ்புத்துப்பட்டு கிராம உதவியாளரை தாக்கியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
கோட்டக்குப்பம் அருகே மஞ்சக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சரவணன், 45; இவருக்கு சொந்தமான நிலத்தை அளவீடு செய்ய, நில அளவை துறையில் அனுமதி பெற்றிருந்தார்.
நேற்று இந்த நிலத்தை அளவீடு செய்வதாக வருவாய் துறையினர் கூறியிருந்தனர்.
ஆனால், நில அளவையர் வராததால் இந்த பணி கைவிடப்பட்டது. இதனால், கோபமடைந்த சரவணன், கீழ்புத்துப்பட்டு வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த வி.ஏ.ஓ., சிராஜ், 38; என்பவரை தாக்கியுள்ளார். சிராஜ் அளித்த புகாரின் பேரில், கோட்டக்குப்பம் போலீசார், சரவணன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.