sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நெடுஞ்சாலையோர கட்டடங்களுக்கு கூடுதல் எப்.எஸ்.ஐ., தர பரிந்துரை

/

நெடுஞ்சாலையோர கட்டடங்களுக்கு கூடுதல் எப்.எஸ்.ஐ., தர பரிந்துரை

நெடுஞ்சாலையோர கட்டடங்களுக்கு கூடுதல் எப்.எஸ்.ஐ., தர பரிந்துரை

நெடுஞ்சாலையோர கட்டடங்களுக்கு கூடுதல் எப்.எஸ்.ஐ., தர பரிந்துரை


ADDED : மே 10, 2024 04:29 AM

Google News

ADDED : மே 10, 2024 04:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை ஒட்டிய பகுதிகளில், புதிதாக கட்டப்படும் கட்டடங்களுக்கு, எப்.எஸ்.ஐ., எனப்படும் தளப்பரப்பு குறியீட்டில் சலுகை வழங்குவது குறித்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை பரிசீலித்து வருகிறது.

தமிழகத்தில் போக்குவரத்து வழித்தடங்களை ஒட்டிய பகுதிகளில், நகர்ப்புற வளர்ச்சி அதிகரித்து வருகிறது. இதை ஊக்குவிக்கும் வகையில், அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.

சென்னையில் பொது போக்குவரத்து மேம்பாட்டுக்காக, மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சென்னையில் இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை செயல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மூன்று புதிய வழித்தடங்களுக்கான பணிகள் நடந்து வருகின்றன.

இத்திட்டத்துக்கு நிலம் பெறுவது, இதன் வழித்தடத்தில் மக்கள் குடியேற்றத்தை அதிகரிப்பது போன்ற நோக்கங்களுக்கு கூடுதல் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதற்காக, இந்த வழித்தடங்களில் கட்டடங்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன.

குறிப்பாக, மெட்ரோ வழித்தடத்தில், நிலத்தின் பரப்பளவில் இரண்டு மடங்கு இருப்பதற்கு பதில், கூடுதல் தளப்பரப்பு குறியீடு வழங்க முடிவானது. இதற்காக கட்டணம் செலுத்தி பெறப்படும் கூடுதல் தளப்பரப்பு குறியீட்டுக்கான கட்டணத்தில், 50 சதவீதம் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், புறவழிச் சாலைகள், ரயில் பாதைகள் உள்ளிட்ட வழித்தடங்களில் கட்டடங்கள் கட்டுவது அதிகரித்து வருகிறது.

இதை ஊக்குவிக்கும் வகையில், கூடுதல் எப்.எஸ்.ஐ., சலுகை வழங்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது. விரைவில் இந்த விஷயத்தில் அரசின் முடிவு அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

நகர்ப்புற வளர்ச்சி அதிகரிக்கும்


சென்னையில் மெட்ரோ வழித்தடங்களில் புதிய கட்டடங்களுக்கு தளப்பரப்பு குறியீட்டிலும், அதற்கான கட்டணத்திலும் சலுகை வழங்கப்படுகிறது. இதற்கு, மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில், தேசிய, மாநில நெடுஞ்சாலை திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்த சாலைகளில் பாலங்கள் கட்டுவது, விரிவாக்கம் செய்வது என, பல்வேறு தேவைகளுக்கு நிலம் எடுக்கப்படுகிறது. இவ்வாறு நிலம் எடுக்கும் நிலையில், இந்த வழித்தடத்தில் உள்ள நிலங்களின் உரிமையாளர்கள் கட்டடங்கள் கட்டும் போது, கூடுதல் எப்.எஸ்.ஐ., வழங்க வேண்டும். குறிப்பாக பிரீமியம் எப்.எஸ்.ஐ., கட்டணத்திலும் சலுகை வேண்டும். சலுகைகள் கிடைத்தால், நெடுஞ்சாலை ஓரங்களில் நகர்ப்புற வளர்ச்சியின் வேகம் அதிகரிக்கும்.

- பி.பாலமுருகன்,

கட்டட அமைப்பியல் பொறியாளர்






      Dinamalar
      Follow us