24ல் பவுர்ணமி, சுப முகூர்த்தம் மனு தாக்கலுக்கு அனுமதி?
24ல் பவுர்ணமி, சுப முகூர்த்தம் மனு தாக்கலுக்கு அனுமதி?
ADDED : மார் 22, 2024 01:06 AM
சென்னை:சுப முகூர்த்த நாளான 24ம் தேதி மனு தாக்கல் செய்வதற்கு, தேர்தல் கமிஷன் அனுமதிக்குமா என வேட்பாளர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்., 19ல் தேர்தல் நடக்கிறது. இதற்கான மனு தாக்கல் 20ம் தேதி துவங்கியது. வரும் 27ம் தேதியுடன் மனு தாக்கல் முடிகிறது.
இதற்கிடையே, 23ம் தேதி சனிக்கிழமையும், 24ம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் வருகிறது. இந்த இரண்டு விடுமுறை நாட்களிலும் மனு தாக்கல் நடக்காது என தேர்தல் கமிஷன் ஏற்கனவே அறிவித்துள்ளது.
ஞாயிற்றுகிழமை, பவுர்ணமியுடன் சுப முகூர்த்த நாளும் வருகிறது. இந்த நாளில் மனு தாக்கல் செய்வதற்கு, பல்வேறு அரசியல் கட்சியினர் மட்டுமின்றி, சுயேச்சைகளும் விரும்புகின்றனர்.
எனவே, விடுமுறை நாளான 24ம் தேதி மனு தாக்கல் செய்வதற்கு, தேர்தல் கமிஷன் அனுமதிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

