sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வானுார் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை கணக்கில் வராத ரூ.1 லட்சம் சிக்கியது

/

வானுார் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை கணக்கில் வராத ரூ.1 லட்சம் சிக்கியது

வானுார் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை கணக்கில் வராத ரூ.1 லட்சம் சிக்கியது

வானுார் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை கணக்கில் வராத ரூ.1 லட்சம் சிக்கியது


ADDED : ஆக 31, 2024 02:07 AM

Google News

ADDED : ஆக 31, 2024 02:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார்: வானுார் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 730 ரூபாய் சிக்கியது.

விழுப்புரம் மாவட்டம், வானுாரில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்சம் வாங்குவதாக புகார் நிலவியது. இந்நிலையில் டி.எஸ்.பி., (பொறுப்பு) வேல்முருகன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி, சப் இன்ஸ்பெக்டர் சக்கரபாணி உள்ளிட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மாலை 4:00 மணிக்கு, வானுார் பத்திரப்பதிவு அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்து சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை இரவு 9:00 மணிவரை நீடித்தது.

அப்போது, அலுவலகத்தில் இருந்த பொதுமக்கள் உள்ளிட்டோர் வைத்தருந்த பணங்களை பறிமுதல் செய்தனர். அதில், உரிய ஆவணங்களை சமர்பித்த பொதுமக்களின் பணம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.

இறுதியில், கணக்கில் வராத ஒரு லட்சத்து 5,730 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக சார் பதிவாளர் சடகோபனிடம் இரவு 9;00 மணிக்கு மேலும் விசாரணை நடத்தினர். இச்சம்பவத்தால் பரபரப்பு நிலவியது.






      Dinamalar
      Follow us