sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திருமணமாகாத பெண்ணுக்கும் குடும்ப சொத்தில் சம உரிமை

/

திருமணமாகாத பெண்ணுக்கும் குடும்ப சொத்தில் சம உரிமை

திருமணமாகாத பெண்ணுக்கும் குடும்ப சொத்தில் சம உரிமை

திருமணமாகாத பெண்ணுக்கும் குடும்ப சொத்தில் சம உரிமை


ADDED : ஜூன் 30, 2024 01:02 AM

Google News

ADDED : ஜூன் 30, 2024 01:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:கள்ளச்சாராய குற்றங்களுக்கு கடும் தண்டனை, எஸ்.சி., ஆணைய தலைவர் வயது வரம்பு உயர்வு உள்ளிட்ட, 14 சட்ட மசோதாக்கள் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டன.

சட்டசபையில் நேற்று காவல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் பதிலளித்து முடித்ததும், 14 சட்ட மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. 2024ம் ஆண்டுக்கான தமிழ்நாடு நிதி ஒதுக்கச் சட்டம் தொடர்பாக, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கொண்டு வந்த, ஐந்து சட்ட மசோதாக்கள் விவாதமின்றி ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

சென்னை மாநகர காவல் சட்டத்தை, திருப்பூர் மாநகர காவல் துறைக்கு நீட்டித்தல்; கழிவுநீரகற்றல் குற்றங்களுக்கான மேல்முறையீட்டு அதிகாரத்தை குடிநீர் வாரியத்தின் நிர்வாக இயக்குனருக்கு வழங்குதல்; புதிய மாநகராட்சிகளை உருவாக்குவதற்கான விதிகளை தளர்த்தும் இரண்டு சட்ட மசோதாக்கள் என, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு கொண்டு வந்த மூன்று மசோதாக்கள், சிறு விவாதத்துடன் ஒருமனதாக நிறைவேறின.

திருமணம் ஆகாத ஆண்களுக்கு இணையாக, திருமணம் ஆகாத பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்க, வருவாய் துறை அமைச்சர் ராமச்சந்திரன் கொண்டு வந்த சட்ட மசோதா;

தமிழ்நாடு எஸ்.சி., - எஸ்.டி., ஆணைய தலைவராக நியமிக்கப்படும் உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியின் வயது வரம்பை 70லிருந்து 75 ஆக அதிகரிக்க, ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் கயல்விழி கொண்டு வந்த சட்ட மசோதா என, மொத்தம் 14 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.






      Dinamalar
      Follow us