sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

உதயநிதி கூட்டத்துக்கு சென்ற ஆட்டோ கவிழ்ந்து இருவர் பலி

/

உதயநிதி கூட்டத்துக்கு சென்ற ஆட்டோ கவிழ்ந்து இருவர் பலி

உதயநிதி கூட்டத்துக்கு சென்ற ஆட்டோ கவிழ்ந்து இருவர் பலி

உதயநிதி கூட்டத்துக்கு சென்ற ஆட்டோ கவிழ்ந்து இருவர் பலி


ADDED : ஏப் 10, 2024 06:28 AM

Google News

ADDED : ஏப் 10, 2024 06:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார் : கள்ளக்குறிச்சி தி.மு.க., வேட்பாளர் மலையரசனை ஆதரித்து, சேலம் மாவட்டம், ஆத்துார், கெங்கவல்லி ஆகிய பகுதிகளில் அமைச்சர் உதயநிதி நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.

கெங்கவல்லி கூட்டத்துக்கு, தலைவாசல் அருகே காமக்காபாளையத்தை சேர்ந்தவர்கள், 25 பேர் வீதம், இரண்டு மினி சரக்கு ஆட்டோக்கள், 27 பேருடன் மற்றொரு மினி சரக்கு ஆட்டோ என, மூன்று ஆட்டோக்களில் காமக்காபாளையத்தில் இருந்து நாவலுார் ஏரிக்கரையில் சென்று கொண்டிருந்தனர்.

இதில், 27 பேருடன் சென்ற மினி சரக்கு ஆட்டோவை, டிரைவர் ராஜதுரை, 48, ஓட்டினார். மாலை, 4:00 மணிக்கு நாவலுார் ஏரிக்கரை வளைவில் சென்றபோது, டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு ஆட்டோ கரையில் கவிழ்ந்தது.

இதில், ஆட்டோவில் பயணித்த அனைவரும் காயமடைந்ததால், '108' அவசரகால ஆம்புலன்ஸ் வரவழைத்து, 27 பேரையும், தலைவாசல் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

அதில், 23 பேர் படுகாயமடைந்த நிலையில் மேல் சிகிச்சைக்கு ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

தி.மு.க., ஒன்றிய இளைஞர்அணி பிரதிநிதி தயாநிதி, 29, தி.மு.க., உறுப்பினரும், கூலி தொழிலாளியுமான செல்லதுரை, 50, ஆகியோர் மருத்துவமனையில் உயிரிழந்தனர்.

மேலும், 21 பேர் சிகிச்சையில் உள்ளனர். வீரகனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us